எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் 80 வயதான சவுதாலா 10 ஆண்டுகள் அதாவது 2023 வரை சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னாள் தலைவரான இவர் கடைசியாக 1999ம் ஆண்டு முதல் 2005 வரை முதல்வர் பொறுப்பை வகித்தார். அரியானாவில் 1999- 2000ம் ஆண்டு 3206 பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ஆவணங்களை திருத்தியும், போலி ஆவணங்கள் கொடுத்தும் இளநிலை ஆசிரியர்கள் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் தகுதியற்ற 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது பற்றி சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் மற்றும் 53 பேர் ஆசிரியர் தேர்வு முறைகேடுகளில் நேரடியாக தொடர்பு வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் டெல்லி சிபிஐ கோர்ட்டில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட் இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தீர்ப்பை வெளியிட்டது.
ஓம் பிரகாஷ் சவுதாலா ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக கூறிய சிபிஐ கோர்ட் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அரசு பதவியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளதால் சவுதாலாவுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கொடுக்கப்படுவதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.
சவுதாலாவின் மகன் மற்றும் மேலும் 8 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 44 பேருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ஒரு நபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஓம் பிரகாஷ் சவுதாலா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அதில் அவர் தனது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கிடையே அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அனுமதி பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்து பிரச்சாரம் செய்தார். அவர் விதிகளை மீறியதாக கூறியதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுதாலாவின் அப்பீல் மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்தது. தண்டனை காலத்தில் சவுதாலா ஜெயிலில் நடந்து கொண்ட விதம் பற்றி நீதிபதிகள் கேட்டறிந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர்.
அதில் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 55 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனை உறுதிப்படுத்தப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சவுதாலாவின் வயதை கருத்தில் கொண்டு கருணை காட்ட இயலாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஏமாற்றுதல், மோசடி செய்தல், போலி ஆவணங்களை பயன்படுத்தி சதி செய்தல், அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்தல் உட்பட பல குற்றச்சாட்டுகள் இருப்பதால் சவுதாலா மற்றும் குற்றவாளிகள் தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது என்று டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் 80 வயதான சவுதாலா 10 ஆண்டுகள் அதாவது 2023ம் ஆண்டு வரை ஜெயிலில் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.