முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தர்ம தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் வழிபட ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்திற்கும் குறைவில்லாமல் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள். இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க  மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் வருகிற கோடை விடுமுறை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் கூட்டத்தை சமாளித்து சாதாரண பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் ஒன்று தர்ம தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம். பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்குவது ஆகும். இதன் மூலம் இவர்கள் சாதாரண நாட்களில் அதிகபட்சம் 3 மணி நேரத்திலும், விடுமுறை நாட்களில் 6 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசிக்க முடியும்.

இவர்களுக்கு வசதியாக இணையதளத்தில் ஒதுக்கப்படும் 300 ரூபாய் மற்றும் சுதர்சன டிக்கெட் ஒதுக்கீட்டை பாதியாக குறைத்து விட திட்டமிட்டு வருகிறது. தற்போது இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் தினமும் 18 ஆயிரமும், சுதர்சன டிக்கெட் 8 ஆயிரமும் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனை பாதியாக குறைத்து இவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தை தர்ம தரிசன பக்தர்களுக்கு ஒதுக்கலாம் என தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் சுலபமாக ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். கோடை விடுமுறையின் போது இது அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து