முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று இளைஞர் - இளம்பெண்கள் பாசறை எழுச்சி தின பேரணி

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்களின் பாசறையின் ஏழாம் ஆண்டு விழாவையொட்டி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாசறை எழுச்சித்தின பேரணி நடத்த வேண்டுமென மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பு கட்டளைக்கிணங்க மாநிலம் முழுவதும் இன்று பாசறை எழுச்சி தின பேரணி நடைபெறுகிறது.
 
அதிமுக பொதுசெயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அண்மையில் விடுத்த அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; புத்திளமை காண வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எனது சிந்தனையில் உதித்த """"கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை"" கடந்த 7.3.2008 அன்று தொடங்கப்பட்டது.
 
இந்தப் பாசறையில் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் நமது உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகளாக விளங்கி வருகின்றனர். நாளைய கழகத்திற்கு நாற்றுப் பண்ணைகளாகவும் இந்தப் பாசறை திகழ்ந்து வருகிறது. நாடு, மொழி, இனம் இந்த மூன்றையும் உயர்த்தும் முற்போக்கு பயிற்சிக் களங்களாகத் திகழும் இந்தப் பாசறையில், எனது தலைமையின் மீது ஈர்க்கப்பட்டு லட்சோப லட்சம் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் புதிய உத்வேகத்துடனும்,
மாறாத உறுதியுடனும், லட்சிய நோக்கத்துடனும், விசுவாசத்துடனும் கழகப் பணியாற்றி வருகின்றனர்.

தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில், 7.3.2015 சனிக் கிழமை அன்று கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்
""""பாசறை எழுச்சி தினப் பேரணி"" நடைபெறும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று மாநிலம் முழுவதும் இன்று எழுச்சி தின பேரணி நடைபெறுகிறது.

சென்னையில் அமைந்தகரை அண்ணா வளைவு அருகில் இருந்து புறப்படும் பாசறை எழுச்சித்தின பேரணியை அதிமுக அமைப்பு செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான கோகுல இந்திரா தொடங்கிவைக்கிறார். இந்த பேரணியில் அதிமுக கொள்கை பரப்பு துணைசெயலாளர் நாஞ்சில் சம்பத் மாவட்ட செயலாளர் கலைராஜன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் செந்தில்வேல், ஆயிரம் விளக்கு பகுதிசெயலாளர் நுங்கை மாறன்,கோதண்டராமர், மாநகராட்சி மண்டலக்குழுத்தலைவர் ஏ.ஈ.வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர்கள் பகுதி செயலாளர்கள் வட்டசெயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை தென்சென்னை வடக்கு மாவட்ட பாசறை செயலாளர் முரளிகிருஷ்ண பிரசாத் மேற்கொண்டுள்ளார்.வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள ஏ.இ. கோயில் தெருவில் இருந்து பாசறை எழுச்சித்தின பேரணி தொடங்குகிறது. இன்று காலை 7 மணிக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் மகளிர் ஆணையத்தலைவருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் தொடங்கி வைக்கிறார். அதிமுக விவசாய அணி செயலாளரும் குடிசை மாற்றுவாரிய தலைவருமான கு.தங்கமுத்து வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் செயலாளர் வில்லிவாக்கம் மகேஷ் செய்துள்ளார். தென்சென்னை தெற்கு மாவட்ட பாசறை சார்பில் லஸ் கார்னர் நவசக்தி விநாயகர் கோயில் அருகில் இருந்து பாசறை எழுச்சித்தின பேரணி தொடங்குகிறது. இன்று காலை 9 மணிக்கு புறப்படும் இந்த பேரணியை அதிமுக இலக்கிய அணி செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சருமான பா.வளர்மதி தொடங்கி வைக்கிறார்.

இந்த பேரணியில் மாவட்டசெயலாளர் விருகை ரவி, பாசறை இணைச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜலட்சுமி, அண்ணா தொழிற்சங்க தலைவர் தாடி.ம.ராசு, தென்சென்னை எம்.பி.செந்தமிழன், ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பாசறை செயலாளர் விஜயபாஸ்கர் மேற்கொண்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து