முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் நிலக்கரிச் சுரங்க விபத்து: 32 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

டொனெட்ஸ்க் - கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரனைனில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நேரிட்ட வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரிலுள்ள ஸேஸியாட்கோ நிலக்கரிச் சுரங்கத் தில், மீத்தேன் வாயுவால் இந்த வெடி விபத்து இந்திய நேரப்படி காலை 10.30 நேரிட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழந்தபோது சுரங்கத்துக்குள் 230 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
 
இதுகுறித்து ரஷ்ய ஆதரவு அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெடி விபத்து நேரிட்ட நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து 32 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டடுத்துள்ளனர், என்றார். விபத்துக்குப் பின் காணாமல் போன மேலும் ஒரு சுரங்கப் பணியாளரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மீத்தேன் வாயு வெடிப்பு நிகழ்ந்தபோது சுரங்கத்திலிருந்த ஏனைய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் ஆதரவு அரசின் அதிகாரிகளும், இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

டொனெட்ஸ்க் நகரின் எல்லையில், அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நிகழந்து வரும் பகுதியில் இந்த ஸெஸியாட்கோ நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து