எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெர்த் - உலகக் கோப்பை லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்டு 8 புள்ளிகளை பெற்ற இந்தியா காலிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
உலகக் கோப்பை லீக் போட்டியில் ஏற்கெனவே பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஆகிய அணிகளை வென்று 6 புள்ளிகளுடன் இருந்த இந்தியாவும். 3-வது இடத்தில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியை நேற்று பெர்த்தில் மோதின. வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் மேற்கிந்திய தீவு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சாள் மேற்கிந்திய தீவு பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் மளமளவென சரிந்தன.
கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் நிலைத்து நின்று அணியை கவுரவமான ஸ்கோருக்கு இழுத்துச் சென்றார். இதேபோல் இந்திய அணிக்கும் நேற்றை போட்டி முக்கியமானதாகவே கருதப்பட்டது. 6 புள்ளிகளுடன் இருந்த இந்தியா இந்த போட்டியில் வென்றால் பி பிரிவிலிருந்து கலிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது. எனவே அந்த அணியும் போர் குணத்துடன் களத்தில் இறங்கின.
முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி பெரும் போராட்டம் நடத்தி 39.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எட்டியது. நேற்றைய போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் கிறிஸ் கெய்லும் களமிறங்கினர்.தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சும் பீல்டுங்கும் அபாரமாக இருந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களால் ரன்களை எடுக்க முடியாமல் பரிதவித்து வந்தனர். 4.5வது ஓவரில் அந்த அணி 8 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்மித்.
அவர் 20 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதில் ஒரு பவுண்டரி அடக்கம். பின்னர் கெய்லுடன் சாமுவேல்ஸ் கை கோர்த்தார். இந்த இருவரும்தான் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி சாதனை படைத்தவர்கள். ஆனால் இந்த ஜோடியை நிலைக்கவிடவில்லை இந்திய வீரர்கள்.
7.2வது ஓவரில் சாமுவேல்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது அந்த அணி 15 ரன்களைத்தான் எடுத்தது. அடுத்ததாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் மொகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அப்போது 8.6ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது மேற்கிந்திய தீவுகள்.
10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 35 ரன்கள் என மிக மோசமான நிலையில் இருந்தது அந்த அணி. பின்னர் ஆடிய சிமன்ஸ் 9 ரன்கள், சமி 26 ரன்கள் ரசல் 8 ரன்கள் என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழ்ந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியிலேயே ஹோல்டர் ஒருவர்தான் அதிகபட்சமாக 64 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை எடுத்திருந்தார்.
அவரால்தான் 182 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை அந்த அணி எடுக்கவும் முடிந்தது.
44.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்கெட்டாக ஹோல்டர் வெளியேறினார். 44.2 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் பந்து வீசிய முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ரன்கள் எடுக்க முடியாதபடி பந்துவீசிய கையோடு விக்கெட்டுகளையும் எடுப்பதில் கவனமாக இருந்தனர்.
8 ஓவர்களை வீசிய ஷமி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும்.இதேபோல் உமேஷ் யாதவ் 10 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜாவும் 8.2 ஓவர்கள் வீசி 27 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின், மொகித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.இந்திய அணி வெல்ல 183 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். 4.1வது ஓவரிலேயே 11 ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா. அதேபோல் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மாவும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். விறுவிறுவென விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லி அரைசதத்தை தொட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14.6 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அப்போது இந்திய அணி 63 ரன்களையே எடுத்திருந்தது. களத்தில் ரகானேவும் ரெய்னாவும் இருந்தனர். ஆனால் ரகானே இந்திய அணியின் ஸ்கோர் 78 ஆக இருந்த போது அவுட் ஆனார்.ரெய்னாவுடன் டோணி கை கோர்க்க இந்திய அணி ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டு 100 ரன்களைத் தாண்டியது. 22.5வது ஓவரில் 107 ரன்களை இந்திய அணி எட்டிய நிலையில் 5வது விக்கெட்டாக ரெய்னா அவுட் ஆனார்.
அவர் 25 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். டோணியுடன் இணைந்த ஜடேஜாவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.டோணியுடன் அஸ்வின் கை கோர்த்து தொடர்ந்து நிதானமாகவே ரன்களை சேர்த்து 39.1 வது ஓவரில் 185 ரன்களை எட்ட இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: