முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துக்குள்ளானது ஜாகுவார் போர் விமானம்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

சண்டிகர் - இந்திய விமானப்படையின் ஜாகு வார் ரக போர்விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அரியாணா மாநிலம், குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஷபத் எனும் இடத்தில் நேற்று முன்தினம் மதியம் இந்த விமானம் விபத்துக்குள்ளானது. அம்பாலா விமானப்படைத் தளத்தில் இருந்து இந்த விமானம் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து குருக்ஷேத்ரா காவல் நிலைய அதிகாரி சிமர்தீப் சிங் கூறும்போது, வயல்வெளியில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. முதற்கட்ட தகவலின்படி, விமானம் விழுவதற்கு முன்பே, விமானி அதிலிருந்து குதித்து விட்டார். அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

விமானத்தை விட்டு வெளியேறு வதற்கு முன்பு அவர் அவசர அழைப்பு விடுத்ததாகவும், விமானி தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறி யுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து