முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., செய்தி தொடர்பு பிரிவு தலைவராக சுர்ஜிவாலா நியமனம்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக ரந்திப் சஞ்சுர்ஜிவாலாவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.

இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பு பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுர்ஜிவாலாவுக்கு வயது 47. இவர் கட்சியில் சிறப்பாக பணிபுரிந்ததால் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுவாக இந்த பதவி பெரும்பாலும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுக்கே வழங்கப்படும். ஆனால் தற்போது இளைஞர்களுக்கே காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுர்ஜிவாலாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

மாணவராக இருக்கும் போதே சுர்ஜிவாலா காங்கிரசில் சேர்ந்துன அரசியலுக்கு வந்தார். பின்னர் இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். 2 முறை அரியானாவில் மந்திரியாக இருந்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்துள்ளார். தொலைக்காட்சிகளிலும் சிறப்பாக பேட்டி அளித்துள்ளார். சிறப்பான செயல்பாடுகளால் ராகுலை கவர்ந்தவர். இதனால் காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் பதவி சுர்ஜிவாலாவுக்கு கிடைத்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து