முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ரதி அக்னிகோத்ரி கணவர் மீது புகார்

ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - நடிகை ரதி கணவர் அடித்து உதைத்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். 1979ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை ரதி. மும்பையில் மாடல் அழகியாக இருந்தவரை பாரதிராஜா தனது புதிய வார்ப்புகள் படத்தில் கிராமத்து பெண்ணாக பாக்கியராஜூக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

தமிழ் படங்களில் மும்பை அழகிகள் நடிப்பதற்கு அடிகோலியவரும் ரதிதான். தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள் படம் உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். கமலஹாசனுடன் உல்லாச பறவைகள் படத்திலும், ரஜினியுடன் முரட்டுக்காளை, கழுகு, அன்புக்கு நான் அடிமை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1981ம் ஆண்டு டைரக்டர் பாலசந்தர் மரோசரித்ராவை இந்தியில் ஏக் துஜே கேலியே என்ற பெயரில் எடுத்தார். இதில் கமலஹாசனுக்கு ஜோடியாக ரதி நடித்தார்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து ஏராளமான தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னட படங்களிலும் நடித்தார். முன்னணி நடிகையாக இருந்த போதே மும்பை கட்டிட கலை நிபுணரும், தொழில் அதிபருமான அனில் விர்வானியை 1985ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு தனுஜ் என்ற மகன் உள்ளார். கணவர் மகனுடன் தெற்கு மும்பையில் ஒர்லி பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் 54 வயதாகும் நடிகை ரதி தனது கணவர் மீது மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். கையில் காயத்துடன் வந்த ரதி துணை கமிஷனர் எஸ்.ஜெயக்குமாரை சந்தித்து தனது கணவர் தன்னை அடித்து உதைத்து காயப்படுத்தியதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். அதன் பேரில் போலீசார் கணவர் அனில் விர்வானி மீது குடும்ப தகராறில் ஈடுபடுதல், காயம் ஏற்படுத்துதல், பலவந்தப்படுத்துதல், குற்ற செயல் புரிதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி துணை கமிஷனர் ஜெயகுமார் கூறும் போது, ரதி கணவர் மீது அடித்து உதைத்ததாக புகார் கூறியுள்ளார். என்ன காரணத்துக்காக அடித்தார் என்று சொல்லவில்லை. மனரீதியாக தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து