முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு

செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 4 மாதத்தில் 39 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மொத்தம் 8 ஆயிரம் தூக்கு தண்டனை கைதிகள் பாகிஸ்தானில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இவர்கள் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். உலகம் முழுவதும் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் அரசோ ஒரே நாளில் 12 பேரை பரலோகத்திற்கு அனுப்பி விட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து