முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை தாக்குதல்: ஏமனில் 142 பேர் பலி

சனிக்கிழமை, 21 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

சனா - ஏமன் தலைநகர் சனாவில் உள்ள மசூதியிலும், 3 வெவ்வேறு இடங்களிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதல்களில் 142 பேர் உயிரிழந்தனர். 151 பேர் காயமடைந்தனர். சனா பகுதியை கைப்பற்றிய ஹூதி முஸ்லீம்கள் வசமுள்ள 2 மசூதிகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். வடக்கு சனாவில் உள்ள அல்ஹஷூஸ் மசூதியில் 3வது தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,

ஏமன் தலைநகரின் தெற்கு சனா பகுதியில் உள்ள பதர் மசூதியில் ஹூதி பிரிவு முஸ்லீம்களும், ஷியா முஸ்லீம்களும் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் நுழைந்த ஒரு பயங்கரவாதி தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். வெளியே தப்பி வருவோரை தாக்குவதற்காக மற்றொரு பயங்கரவாதி தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான் என்று தெரிவித்தனர். இது குறித்து ஏமன் சுகாதார அமைச்சகத்தின் செயல்பாட்டுக்குழு உறுப்பினர் நாஷ்வன் அல் அதாப் கூறுகையில், இந்த தாக்குதல்களில் 142 பேர் உயிரிழந்தனர். சுமார் 357 பேர் காயமடைந்தனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து