முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் சதிகாரன் லக்வியை விடுதலை செய்ய மறுப்பு

சனிக்கிழமை, 21 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

லாகூர் - மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதி ஷகியுர் ரஹ்மான் லக்வி மூளையாக செயல்பட்டார். எனவே அவர் உட்பட 6 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே அவரை மற்றொரு வழக்கில் பாகிஸ்தான் கைது செய்தது. அதை எதிர்த்து அவர் மேல்கோர்ட்டில் அப்பீல் செய்து விடுதலையானார். இருந்தும் பாகிஸ்தான் அரசு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் அவரை மீண்டும் கைது செய்தது. இது போன்று அவர் 4 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரி லாகூர் ஐகோர்ட்டில் லக்வி மனு செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது.

அவர் சார்பில் வக்கீல் ராஜா ரிஷ்வான் அப்பாசி ஆஜராகி வாதாடினார். மும்பை தாக்குதல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டும் இந்தியா, அமெரிக்கா வற்புறுத்தலின் பேரில் அரசு லக்வியை தேவையின்றி கைது செய்துள்ளது. எனவே அவரை கைது செய்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால் லக்வியின் கோரிக்கையை ஏற்று அவரை விடுவிக்க லாகூர் ஐகோர்ட் மறுத்து விட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து