முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 கோடி நஷ்டஈடு: ரஜினிகாந்துக்கு விநியோகஸ்தர்கள் பாராட்டு

சனிக்கிழமை, 21 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

சென்னை -  திருச்சி, தஞ்சை லிங்கா பட விநியோகஸ்தர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
லிங்கா பட நஷ்டஈடு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தவர்களில் சரத்குமாரும், கலைப்புலி தாணுவும் முக்கியமானவர்கள். கலை குடும்பத்தில் கலகம் கூடாது என்று உழைத்தனர்.

10 கோடி ரூபாய் பணத்தை வாங்கி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிரித்து கொடுக்க கலைப்புலி தாணு பட்டபாட்டை பார்த்த போது அவரது பதவி முள்கிரீடம் என தெரிந்து கொண்டோம். ராக்லைன் வெங்கடேஷ் எங்களை உபசரித்ததை பார்த்த போது  அவரை போய் கன்னடர் என பேசி விட்டோமே என்று மனம் கூனி குறுகுகிறது. பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணமாக எதையாவது செய்து சந்தேஷப்படுத்துங்கள் என்று கூறினார்.

வேந்தர் மூவிஸ் இதில் பங்கு கேட்பது ஒன்றும் ஏற்புடையதாக இல்லை. திங்கட்கிழமை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் கட்டமாக வைப்பு  தொகை திருப்பி தரப்படும் என தெரிகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு எங்களால் இயன்ற நிவாரணத்தை வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை வைக்கிறோம்.

எல்லா விநியோகஸ்தர்களும் தொடர்ச்சியாக படங்களை வெளியிட இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. தோல்வி விரக்தியில் இருந்த எங்களுக்கு உதவிய ரஜினி, ராக்லைன் வெங்கடேஷ், சரத்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து