எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாயகன் வீரா தன் நண்பர்களான அஜய் பிரசாத் மற்றும் சிவாவுடன் இணைந்து சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்கள் ஒருநாள் ஷேர் ஆட்டோவில் போகும்போது நாயகி ரெஜினாவை சந்திக்கிறார்கள். எம்.எல்.எம்மில் வேலை பார்த்து வரும் ரெஜினா இவர்களையும் எம்.எல்.எம்.மில் சேரச் சொல்லி வற்புறுத்துகிறார். அவர்களிடம் தன்னுடைய செல்போன் நம்பரையும் கொடுத்துவிட்டு செல்கிறார். பின்னர் நாயகியை பார்ப்பதற்காகவே எம்.எல்.எம்மில் சேர்ந்து அவளுடன் பல சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார் வீரா. இதன்மூலமாக நாயகியுடன் காதல் வளர்க்கிறார் வீரா.
ஒருநாள் இருவரும் சேர்ந்து ஆட்களை சேர்க்க செல்லும் இடத்தில் சிலபேர் இவர்களை இரட்டை அர்த்த வசனங்களால் கேலி செய்கின்றனர். இதனால், கோபமடைந்த வீரா அவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிடுகிறார்.
பின்னர் வீராவை சமாதானப்படுத்தும்விதமாக தான் இந்த வேலையில் சேர்ந்ததற்கான காரணத்தை விளக்கி கூறுகிறாள் ரெஜினா. நரேன் நடத்திய பைனான்சில் அதிக வட்டி தருவதாக செய்யப்பட்ட விளம்பரத்தை நம்பி, தனது அப்பா நிறைய கடன் வாங்கி அந்த பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டதையும், பின்னர் பைனான்ஸ் கம்பெனி மூடப்பட்டதும், அந்த வேதனையில் தனது அப்பா இறந்துவிட்டதையும், கடனால் தத்தளிக்கும் தனது குடும்பத்தை காப்பாற்றவே இந்த வேலையில் சேர்ந்ததாகவும் அவனிடம் கூறுகிறாள்.
இதையெல்லாம் கேட்ட வீரா, அவளுக்கு தன்னால் முடிந்தளவு ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறான். இந்நிலையில், பைனான்ஸ் கம்பெனி நடத்தி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுதலையாகும் நரேன், போலி டாக்குமெண்டுகள் தயாரிக்கும் இளவரசுவிடம் தஞ்சம் புகுகிறார்.
அவர் மூலமாக பட்டியல் சேகர் நடத்தும் மிகப்பெரிய நகைக் கடையை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். இதற்கு வீரா மற்றும் அவர்களது நண்பர்களை உதவிக்கு அழைக்கிறார். ஆனால், அவ்வளவு பெரிய நகைக் கடையை தங்களால் கொள்ளையடிக்க முடியாது என கைவிரிக்கின்றனர் வீரா மற்றும் அவரது நண்பர்கள்.
ஆனாலும், வீரா மற்றும் அவரது நண்பர்களுக்கு பணம் தேவைப்படுவதால், ஏதாவது கொள்ளையில் ஈடுபட துடிக்கிறார்கள். அப்போது, கருப்பு பணமாக ரூ.10 லட்சம் ஒரு இடத்தில் கைமாறுவதாக இவர்களுக்கு தகவல் வருகிறது. அதை கொள்ளையடிக்க போகும்போது பணத்துக்கு பதில் அங்கு தங்க கட்டி இருப்பதை பார்க்கிறார்கள். இருந்தாலும், அதை கொள்ளையடித்து தப்பித்துச் செல்லும்வேலையில், தங்க கட்டிக்கு சொந்தமானவர்கள் இவர்களை சுற்றி வளைக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும்போது, அந்த தங்கக்கட்டிகளை தவற விடுகிறார்கள். இருவருக்கும் இது கிடைக்காமலே போய்விடுகிறது. எனவே, வீரா மற்றும் அவரது நண்பர்களை தங்க கட்டிகளுக்கு சொந்தமான கும்பல் தேடி வருகிறது.
ரகசியமாக திட்டமிட்ட இந்த கொள்ளை சம்பவத்தை யார் காட்டிக் கொடுத்தது என்று யோசனை செய்யும் வேளையில், இதற்கெல்லாம் நரேன்தான் காரணம் என்பதை அறிகிறான் வீரா. இதனால் கோபமடைந்த அவன், பட்டியல் சேகரிடம் சென்று நரேன் அவருடைய நகைக் கடையை கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதை கூறுகிறான்.
பதிலுக்கு பட்டியல் சேகரும் நரேனை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது நடக்கும் விபத்திலிருந்து பலத்த காயங்களுடன் தப்பிக்கும் நரேனுக்கு நேரடியாக மிரட்டலும் கொடுக்கிறார் பட்டியல் சேகர். நரேனை பற்றி பட்டியல் சேகரிடம் காட்டிக் கொடுத்த வீராவிடம் இளவரசு, நரேனை பற்றிய உண்மையான விவரங்களை கூறுகிறார்.
பட்டியல் சேகரால்தான் நரேன் இந்த நிலைமைக்கு ஆளானார் என்பதை அறிந்ததும், வீரா நரேனின் அறிவுரைப்படி பட்டியல் சேகரின் நகைக் கடையை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார். அதன்பின்னர், இவர்கள் தங்களது ராஜதந்திரத்தால் பட்டியல் சேகரின் நகையை கொள்ளையடித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் வீரா ‘நடுநிசி நாயகள்’ படத்தின் ஹீரோ. ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் நன்றாக நடித்திருந்தாலும், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் இவருக்கு தேடித்தரவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றார்போல் இவரது நடிப்பும் அழகாக இருக்கிறது. நகைக்கடையை கொள்ளையடிக்க இவர் போடும் திட்டங்கள் எல்லாம் சூப்பர்.
நாயகி ரெஜினா வழக்கமான கதாநாயகிபோல், நாயகனுடன் ஒரு டூயட், அதன்பிறகு ஒருசில காட்சிகள் என வந்துவிட்டு போகிறார். இவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக வரும் அஜய் பிரசாத், சிவா இருவரில் சிவா செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. அஜய் பிரசாத் நாயகனுடன் இணைந்து நடிப்புக்கு போட்டி போட்டிருக்கிறார்.
பைனான்ஸ் கம்பெனி வைத்திருப்பவராக வரும் நரேனுக்கு படத்தில் காட்சிகள் குறைவே. இருந்தாலும் அதற்கேற்றார்போல் அளவான நடிப்பில் மிளிர்கிறார். பட்டியல் சேகர் அமைதியான வில்லனாக வலம் வந்திருக்கிறார். வில்லனுக்குண்டான ஆக்ரோஷம் இல்லாவிட்டாலும், அமைதியிலேயே அனைத்து காரியங்களையும் செய்துவிடும் வில்லனாக பளிச்சிட்டிருக்கிறார்.
இயக்குனர் அமித், இது முதல் படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு படத்தை அழகாக எடுத்திருக்கிறார். திரைக்கதையை அழகாக கையாண்டிருக்கிறார். நகை கடையில் திருடுவதற்கு திட்டம் போடும் காட்சிகள் எல்லாம் சீட்டின் நுனிக்கு நம்மை இழுத்திருக்கிறது. நிறைய விஷயங்களை யோசித்து அதை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய திரைக்கதைதான்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரேயொரு பாடல்தான். அந்த பாடலையும் ஜி.வி.பிரகாஷே பாடியிருக்கிறார். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. திருடப்போகும் காட்சிகளில் வரும் பின்னணி இசை வெகுவாக ரசிக்க வைக்கிறது.
புதுமுக இயக்குனர், புதிய படம் என்ற உணர்வு இல்லாமல் பெரிய இயக்குனரின் படம் போன்ற உணர்வை கொடுத்திருக்கிறது ராஜதந்திரம்.
மொத்தத்தில் ‘ராஜதந்திரம்’ ராஜநடை
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.