முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டை கண்டித்து கேரள சட்டசபையில் மீண்டும் ரகளை

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம் - கடந்த 13ம் தேதி நடந்த வரலாறு காணாத தொடர் அமளி மற்றும் போராட்டங்கள் காரணமாக 5 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டன. இதனால் சபை மீண்டும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

கேரள சட்டசபையின் 13வது கூட்ட தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 9ம் தேதி வரை சபை நடைபெறும். மார்ச் 13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதுபான ஊழலில் சிக்கிய நிதி அமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் கூறின.

அதையும் மீறி கடந்த 13ம் தேதி நிதி அமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது சட்டசபையில் வரலாறு காணாத ரகளை ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கையை சேதப்படுத்தினர். கம்ப்யூட்டர், மைக், இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பெண் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டனர். ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேருக்கு நேர் மோதினர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இடதுமுன்னணியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 13ம்தேதி சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 23ம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு சபை கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று காலை 8.30 மணியளவில் சபை கூடியது. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்துக்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தனை பேசுவதற்கு சபாநாயகர் சக்தன் அழைத்தார். இதை தொடர்ந்து அச்சுதானந்தன் பேசுகையில், பெண் எம்.எல்.ஏ.க்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி அமைச்சர் மாணி தாக்கல் செய்த பட்ஜெட்டை ரத்து செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து முதல்வர் உம்மன்சாண்டி பேசுகையில், எம்.எல்.ஏ.க்களின் ரகளையை உலகம் முழுவதும் டி.வி.யில் பார்த்தது. எனவே அவர்களது சஸ்பெண்டை ரத்து செய்ய முடியாது என்று கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து சபாநாயகர் சக்தன் கேள்வி நேரம், பட்ஜெட் மீதான விவாதம், பூஜ்யநேரம் என அனைத்து சபை நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக கூறினார். தொடர்ந்து சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடியே சபைக்கு வெளியே வந்து போராட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் கூறுகையில், எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்க சபாநாயகர் சக்தன் மறுத்து விட்டார். பட்ஜெட் மீது எந்த விவாதத்தையும் நடத்தாமல் பட்ஜெட் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டிருப்பது கேரள சட்டசபையில் இதுவரை நடந்திராத சம்பவமாகும். நேற்று சட்டசபையின் கருப்பு நாளாகும். சட்டசபை முடிந்தாலும் ஒத்தி வைக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். கவர்னர் சதாசிவத்தை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுக்கவுள்ளோம் என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து