முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதன்கிழமை, 25 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி  நேற்று கொடியேற்றம் நடந்தது. உற்சவர் சன்னதியில் இருந்து முருகன் தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடி மரத்தின் அருகில் எழுந்தருளினர். பின்னர் மிதுன லக்குனத்தில் காலை 11.15 மணி முதல் 11.45க்குள் கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் சுவாமி காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலை தங்க மயில், குதிரை, வெள்ளி பூத, அன்னம், சேஷ, ரிஷப, வெள்ளி யானை போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார். இதன் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் நாள் கைபாரம் நடைபெறும். ஏப்ரல் 5ம் தேதி இரவு 7 மணிக்கு பட்டாபிஷேகமும், 6ம் தேதி காலையில் 12.30-12.45 மணிக்குள் திருக்கழ்யானமும், 7ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.
8ம் தேதி தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை, கோவில் ஸ்தானீக பட்டர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து