முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரடி தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு: ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - கரடி தாக்கி மரணமடைந்த அதிமுக கிளை செயலாளர் மற்றும் அவரது மனைவியின் மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி ஒன்றியம் ஜக்கானாரை ஊராட்சி கொத்தமுக்கை க கிளைக்கழக செயலாளர் டி.எச்.ஹாலனின் மனைவி மாதியம்மாள் கரடி தாக்கி அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டும் , தாக்குதலை தடுக்க முயன்ற ஹாலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டும் குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் வருத்தமுற்றேன்.

அகால மரணமடைந்த ஹாலன், அவரது மனைவி மாதிரியம்மாள் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, மரணமடைந்தோரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமார் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து