முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீண்டாமையை ஒழிக்க தொகாடியா யோசனை

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

மும்பை - செல்ஃபி எடுத்து அதை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு அவர்களை விருந்துக்கு அழையுங்கள். இப்படி செய்தால் இந்துக்கள் மத்தியில் தீண்டாமை ஒழியும் என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

தீண்டாமை இல்லா இந்து சமூகத்தை உருவாக்குவது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த லட்சியத்தை அடைய இந்து மித்ரு பரிவார் என்ற யோசனையை பின்பற்றுமாறு அவர் இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருவருக்கொருவர் விருந்து பறிமாறி நட்பு பாராட்ட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இதழில் பிரவீண் தொகாடியா குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து