முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை கொண்டு வந்ததே ஆ.ராசாதான்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை கொண்டு வந்ததே திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும், சிதம்பரமும்தான் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி கொண்டு சிறைக்கு சென்றவர் ஆ. ராசா. அப்போது அவரை பற்றிசமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் வெளிவந்தன. இதை தடுக்கவே தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A வை அவர் கொண்டு வந்தாராம். இந்த சட்டம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சட்டம். இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தடை விதித்து தீர்ப்பளித்தது. தன்னை பற்றி யாரும் எழுதி விட கூடாது என்பதற்காக ஆ. ராசாதான் இச்சட்டத்தை அமைச்சரவையில் முன்வைத்தார்.

பிறகு அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அப்போதே ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன என்று முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் பல உண்மைகளை தற்போது போட்டு உடைத்திருக்கிறார். இச்சட்டம் கொண்டு வர ப. சிதம்பரமும் காரணம் என்றும் பரத்வாஜ் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து