முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

மேட்ரிக்ட் - ஸ்பெயின் நாட்டில் இருந்து ஜெர்மனி நோக்கி சென்ற பிரான்சு விமானம் நடுவழியில் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியானது தெரிந்ததே. இந்த விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது அந்த விமானத்தை ஓட்டிய விமானி தற்செயலாக வெளியில் சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த துணை விமானி அந்த விமானத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டார். பின்னர் விமானி திரும்ப வந்து கதவை தட்டிய போது கதவை திறக்காமல் துணை விமானி தானே அந்த விமானத்தை தன் இஷ்டப்படி ஓட்டி சென்றாராம்.

கருப்பு பெட்டியில் சில உரையாடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் மூலம் அந்த துணை விமானி வேண்டும் என்றே அந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து