Idhayam Matrimony

வாக்காளர் அட்டை பெறும் வசதி: சந்தீப் சக்சேனா தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் நேற்று புதிய வாக்காளர் அட்டை மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தர வள்ளி, எல்காட் இயக்குனர் அதுல்ஆனந்த், தேர்தல் இணை ஆணையர் அஜய் யாதவ், அதிகாரி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பேசியதாவது:–

தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் அமைந்துள்ள பொது சேவை மையங்களில் புதிதாக ஆன்லைன் மூலம் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல், பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக எவ்வித அலைச்சலும் இல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய கார்டு வழங்கப்படும்.இதன் மூலம் பொதுமக்கள் சிறந்த பயன் அடைவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து