முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணை கட்ட முயலும் கர்நாடகத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - காவேரியில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக சட்டபேரவையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த தீர்மானம், அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் காவேரி நடுவர் மன்றத்தீர்ப்பை அரசிதழில் கொண்டு வர மக்களின் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கர்நாடகத்தின் முயற்சியை கண்டித்து தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முறையிட வேண்டுமென முதலமைச்சர் பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டபேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அரசினர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் விபரம் வருமாறு:காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில்இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதையும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் காவேரிநீரவாரி நிகமம் வாயிலாக மேற்கொள்ளவுள்ள திட்டங்களையும், தடுத்து நிறுத்தத் தேவையானநடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்; காவேரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில்அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடகம் செயல்படுத்த முனையக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்;5.12.2014 அன்று இந்த மாமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதுமத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதற்கு இந்த மாமன்றம்தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழகத்தின் எதிர்ப்பைபொருட்படுத்தாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 25கோடி ரூபாயை கர்நாடக அரசு தனது நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ளதற்கு இந்தமாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

கர்நாடக அரசு, மேகதாது நீர்மின் திட்டம் மற்றும் வேறு பல திட்டங்களை எடுத்துக்கொள்வதை நிறுத்தி வைக்கும்படி கர்நாடகத்திற்கு அறிவுரை வழங்க முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை 2.9.2013அன்று கடிதம் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கும்; கர்நாடக அரசு, காவேரிநீரவாரி நிகமம் என்ற அமைப்பின் மூலமாக, பல நவீனமயமாக்கும் திட்டங்களை நிறுத்தி வைக்க,கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி பாரதப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 3.9.2013 அன்று கடிதம் அனுப்பியதற்கும்; காவேரி மேலாண்மைவாரியம் அமைக்கப்படும் வரையிலும் தமிழகத்தின் அனுமதியில்லாமலும் இத்திட்டங்களைகர்நாடகம் மேற்கொள்ள தடை விதிக்க கோரியும், மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு ஏற்படும்வரையிலும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தற்போதைய நிலைகடைப்பிடிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு வழங்கவும் கோரிஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி 11.4.2014 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதற்கும்; மேகதாதுவில் புதிய அணைகள் கட்ட தொழில் நுட்ப சாத்திய அறிக்கை தயார் செய்வதற்காக கர்நாடக அரசின்விருப்பம் கோரும் அறிவிப்பை நிறுத்தி வைத்திடவும் குடிநீர் வழங்கல் என்ற போர்வையின்அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கவும் பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா 12.11.2014 அன்று நாளிட்ட கடிதத்தில் கேட்டுக்கொண்டதற்கும்; இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 18.11.2014 அன்று இடைக்கால மனு ஒன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தமைக்கும்; மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காகஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடக அரசு தனது 2015-2016 ஆம்ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்ததை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் அனுமதிஇல்லாமல், எந்த திட்டத்தையும் கர்நாடகம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது எனஅறிவுரை வழங்க 21.3.2015 அன்று தமிழக முதல்வர் பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பியகடிதத்திற்கும்; இது தொடர்பாக 26.3.2015 அன்று மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததற்கும்; தனது பாராட்டுதலையும், நன்றியையும்இந்த மாமான்றம் தெரிவித்துக் கொள்கிறது.

மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை கர்நாடகத்தால்தயாரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாகஎடுக்க வேண்டும் என்றும்; காவேரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும்மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணை, நீர்த்தேக்கம் போன்ற எந்த ஒருதிட்டத்தையும் செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்கக்கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்;காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்தியஅரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது.

அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினை ஒரு மனதாக நிறைவேற்றித்தரும்படி உறுப்பினர்களை பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.மேலும், இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சார்ந்தஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாரதப் பிரதமரை நேரில்சந்தித்து, இந்த தீர்மானத்தை அவரிடம் வழங்கி, தமிழகத்தின் கவலையையும் நிலைப்பாட்டையும்பாரதப் பிரதமரிடம் எடுத்துரைக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் இந்த தருணத்தில்கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலமைச்சரின் தீர்மானத்தை வரவேற்று துரைமுருகன், (திமுக) பிரின்ஸ்( காங்கிரஸ்) ஆறுமுகம்( கம்யூனிஸ்ட்) செ.கு.தமிழரசன்( குடியரசுக்கட்சி) தனியரசு( கொங்கு இளைஞர் பேரவை) கதிரவன், உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து