முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த் பூஷண் - யாதவை கட்சியில் இருந்து நீக்க போர்க்கொடி

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - கட்சிக்கு எதிராக பணியாற்றும் பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான கபில்மிஸ்ரா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் பேராசைக்காரர்கள். சதி திட்டம் தீட்டுபவர்கள் என்றும் கபில்மிஸ்ரா கூறியுள்ளார். இது குறித்து கபில்மிஸ்ரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

கட்சியின் தேசிய கவுன்சில் நாளை(இன்று) கூடுகிறது. அப்போது பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும். இதன்பொருட்டு எல்லா எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். எனவே எந்த குழப்பமும் இல்லை. கட்சிக்கு எதிராக செயல்படும் இருவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கபில்மிஸ்ரா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து