முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்: கிளார்க்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி வருகிற 29ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. அரை இறுதியில் இந்தியாவை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,

எங்கள் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நாங்கள் தோற்றோம். அதுதான் எங்களது திருப்புமுனையாகும். அதன்பிறகு நாங்கள் நன்கு பயிற்சி எடுத்தோம். நியூசிலாந்து அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கும் என்பதை அறிவோம். அவர்கள் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் உள்ளனர்.

அவர்களுக்கு எதிரான இறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இறுதி போட்டிக்கு அதிக நாட்கள் இடைவெளி இல்லை. ஆனாலும் சோர்வில் இருந்து மீண்டு போட்டிக்கு முழுமையாக தயாராவோம். மனரீதியாக நாங்கள் இறுதி போட்டிக்கு ஏற்கனவே தயாராகி விட்டோம். தோனிக்கு இதுதான் கடைசி உலக கோப்பை என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக அப்படி சொல்ல முடியாது. அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து