முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகுகிறேன்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பொது வாழ்வில் இருந்து விலகுகிறேன் என்று அன்னா ஹசாரே ஆவேசமாக தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக போராடி வரும், அன்னா ஹசாரே, போராட்டங்கள் நடத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்தும் பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் எனக்கு பணம் வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். அவ்வாறு யாராவது நிரூபித்தால், நான் பொதுவாழ்வில் இருந்து விலகி விடுகிறேன். நான் பொதுக்கூட்டங்களில் பேசும் போதெல்லாம் அங்கு ஒரு பையை வைப்பேன். அதில் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை, உங்களால் முடிந்த பணத்தை போடுமாறு பொதுமக்களிடம் கேட்பேன். இவ்வாறாக சேர்த்த ஒவ்வொரு ரூபாய்க்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து