முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

ராஞ்சி - ஜார்கண்டில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜார்கண்டில் துபியாகி என்ற கிராமத்தில் நேற்று அதிகாலை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் பீகாரில் உள்ள நகுல் யாதவ் என்பவர் தலைமையிலான மாவோயிஸ்டு குழுவை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் காயமடைந்தனர். இது குறித்து டிஜிபி டி.கே. பாண்டே கூறுகையில், மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

பீகாரில் நகுல் யாதவ் மாவோயிஸ்டு குழுவை சேர்ந்த தீவிரவாதிகள் சமீபத்தில் ஜார்கண்டில் பண்ணையார் குடும்பத்தை சேர்ந்த 3 பேரை சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. தற்போது மோதல் நடந்த பகுதி மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு நிறைந்த பகுதி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் தொடங்கிய துப்பாக்கி சண்டை அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. தற்போது உயிரிழந்த மாவோயிஸ்டுகள் குறித்த அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து