எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் - உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. உலக கோப்பை இறுதி போட்டியில், முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, ஆரம்பத்திலேயே ஆரோன் பின்ச் விக்கெட்டை டக் அவுட்டில் இழந்தாலும், கேப்டன் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் தயவால் அதிரடியாக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆகியது.
முன்னதாக, உலக கோப்பை பைனலில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து அணி உலக கோப்பை பைனலை, பதற்றத்தோடு ஆட ஆரம்பித்ததன் விளைவு, முதல் ஓவரிலேயே அதிரடி வீரரும், அந்த அணி கேப்டனுமான மெக்கல்லத்தை இழந்தது. எனவே, மார்டின் கப்திலும், வில்லியம்சனும் நிதானமாக ஆட ஆரம்பித்தனர். எனவே, முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களின் ஆதிக்கமே இருந்தது.
10 ஓவர்களில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகும், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 33ஆக இருந்தபோது மார்டின் கப்திலும் (15 ரன்), 12.2 ஓவர்களில் ஸ்கோர் 39ஆக இருந்தபோது, வில்லியம்சனும் (12 ரன்) அவுட் ஆகினர். கப்திலை மேக்ஸ்வெல் பௌல்ட் செய்தார். வில்லியம்சன், ஜான்சன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.
இதனால் நியூசிலாந்து தடுமாற்றமடைந்தது. டைலரும், எலியட்டும் நிதான ஆட்டத்தால் அதை சரிகட்ட முயன்றனர். இருவரும் 69 பந்துகளில் 50 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். ஆட்டத்தின் பாதியான 25 ஓவர்களில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்திருந்தது. இதன்பிறகு சற்று வேகம் பிடித்த பேட்டிங் 35 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. அப்போது, டைலர்-எலியட் ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் கடந்தது.
ஆனால், அடுத்த ஓவரிலேயே, டைலர் 40 ரன்களில் நடையை கட்டினார். அதே ஓவரிலேயே கோரி ஆண்டர்சனும் டக் அவுட் ஆனார். இதற்கடுத்த ஓவரில் ரோன்ச் டக் அவுட் ஆனார். 150 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் பவர் பிளேயை ஆரம்பித்த நியூசிலாந்து 151 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது.
இதனிடையே சிறிது நேரம் நின்ற டேனியல் வெட்டோரி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சன் பந்தில் பௌல்ட் ஆனார். பொறுத்து பார்த்த எலியட்டும் 83 ரன்களில் அவுட் ஆனார்.
171 ரன்களுக்கு 8 விக்கெ்ட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாநதை அதன்பிறகு எழவிடவில்லை ஆஸ்திரேலியா. மேட் ஹென்ட்ரி டக் அவுட் ஆன நிலையில், 11 ரன்கள் எடுத்திருந்த டிம் சவுத்தியை அருமையாக ரன் அவுட்செய்தார் மேக்ஸ்வெல். இதனால் 45 ஓவர்களிலேயே நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஸ்திரேலியா விரட்டலை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 1.4 ஓவர்களில் 2 ரன்களாக இருந்தபோது, ஆரோன் பின்ச், டரெண்ட் பவுல்ட் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணியினரும், ரசிகர்களும், கொண்டாட்டத்தில் திளைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியை வார்னர் நீடிக்கவிடவில்லை. தனது வழக்கமான அதிரடியால் நியூசிலாந்து பந்து வீச்சை திணறடித்தார்.இதனால் 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது.
வார்னர் 40 ரன்களுடனும், ஸ்மித் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆனால், அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 45 ரன்களில், ஹென்ட்ரி பவுன்சரில், எலியட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 12.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 63 ரன்களை எடுத்திருந்தது. எனவே நியூசிலாந்து மீண்டும் ஆட்டத்திற்குள் வர வாய்ப்பு கிடைத்தது.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இதைத் தொடர்ந்து களமிறங்கினார். முதலில் சிறிது பதற்றத்தோடு ஆடிய கிளார்க், பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே நியூசிலாந்தால் ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள்ளாக்க முடியவில்லை. 29 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 151 ரன்களை எடுத்திருந்தது.
வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, 74 ரன்கள் எடுத்திருந்த கிளார்க் ஹென்ட்ரி பந்தில் பௌல்ட் ஆகினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக கைதட்டலுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை கொடுத்தனுப்பினர். கிளார்க் அவுட் ஆனபோது ஆஸ்திரேலியா 175 ரன்களை எடுத்து வெற்றியை நெருங்கியிருந்தது. வாட்சனும், ஸ்மித்தும் இணைந்து 33.1 ஓவரில், வெற்றியை உறுதி செய்தனர்.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் இப்போட்டியிலும் அருமையாக ஆடி 56 ரன்களுடனும், வாட்சன் 2 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். நியூசிலாந்து தரப்பில் ஹென்ட்ரி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலியா 5-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.