முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் காதலர் கண் முன் கல்லூரி மாணவி பலாத்காரம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

வாரங்கால் - தெலுங்கானாவில் 20 வயது கல்லூரி மாணவி தனது காதலர் கண் முன்பு 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் உள்ள எனுமமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது காதலருடன் வெளியே சென்றுள்ளார். பாலாஜி நகரில் உள்ள எனுமமுலா விவசாய மார்க்கெட்டில் இருந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது 4 பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் அந்த 4 பேர் அந்த மாணவியின் காதலரை அடித்து நொறுக்கியுள்ளனர். காதலரின் கண் முன்பே அந்த 4 பேரும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து மாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து