முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பகுதியில் மீன் பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: இந்தியக் கடலோர காவல் படையினர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பட்டினம் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது கடலோர காவல் படையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கடலோர காவல் படையினர், அந்தப் படகில் இருந்த செல்வா, பத்மஸ்ரீ உள்பட 5 இந்திய மீனவர்களைக் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகு, 220 கிலோ மீன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை, சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனர். துறைமுகம் போலீஸார் அவர்களை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, 15 நாள்கள் காவலில் வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து 5 இலங்கை மீனவர்களும், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து