முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1–ந்தேதி முதல் பிளாட்பாரம் கட்டணம் ரூ.10 ஆக உயருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ரெயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. இதற்காக ரெயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரெயில்வே துறையின் வருவாயை பலமடங்கு பெருக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1–ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

ரெயில் நிலையங்களில் உறவினர்களை வழி அனுப்ப வருபவர்கள் கட்டாயம் பிளாட்பாரம் டிக்கெட் பெற வேண்டும். இந்த கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருவாய் உயர்வது மட்டுமின்றி ரெயில் நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும் குறையும் என்று ரெயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஒருவரை வழி அனுப்பவோ, வரவேற்கவோ வரும் போது குடும்பமாக 10–க்கும் மேற்பட்டவர்கள் வரும் போது இடநெரிசலும், கழிவறை, குடிநீர், குப்பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதும் குப்பைகள் குவியும் நிலையும் உருவாகின்றன.

இவற்றை கருத்தில் கொண்டு தான் பிளாட்பார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சென்ட்ரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–

பிளாட்பாரம் கட்டணம் உயர்வதன் மூலம் ரெயில் நிலையத்திற்கு தேவையற்ற நபர்கள் வருவது குறையும். வழியனுப்ப கூட்டமாக வருவதற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு பேர் வரலாம். இதன் மூலம் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நிலையத்தை சுத்தமாக, தூய்மையாக வைத்து கொள்ள முடியும்.

சென்ட்ரல் நிலையத்தை தினமும் சராசரியாக 2 லட்சம் பேர் கடந்து செல்கின்றனர். 10 ஆயிரம் பேர் பிளாட்பாரம் டிக்கெட் பெற்று உள்ளே வருகின்றனர். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தேவையற்ற நெரிசலை பிளாட்பாரம் கட்டண உயர்வு மூலம் தவிர்க்கலாம் என நம்புகிறோம்.

மேலும் புறநகர் மின்சார டிக்கெட்டை வைத்து கொண்டு சென்ட்ரல் நிலைய வளாகத்திற்கு வரக் கூடாது. அதுபோல எக்ஸ்பிரஸ், மெயில் டிக்கெட் பயணிகள் மின்சார ரெயில் நிலையத்திற்கு செல்வதும் தவறாகும். பயணம் செய்யக் கூடிய ரெயில் நிலைய வளாகத்திற்குள் செல்லத் தான் அந்த பயணியின் டிக்கெட் தகுதி படைத்ததாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிளாட்பாரம் டிக்கெட் இல்லாமல் ரெயில் நிலையத்தில் பிடிப்பட்டால் ரூ.1000 அபராதம் விதிக்க விதிமுறை உள்ளது. ஆனால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.350 தான் மனிதாபமான முறையில் வசூலிக்கப்படுகிறது. பிளாட்பாரம் டிக்கெட் 2 மணி நேரம் மட்டும் பயன்படுத்த தகுதியுடையது. அதற்குள்ளாக அவர் வெளியேற வேண்டும் என்பதும் ரெயில்வே விதிமுறை.

மேலும் ஏப்ரல் 1–ந்தேதி அன்று 120 நாட்கள் முன்பதிவும் தொடங்குகிறது. இதுவரை 90 நாட்கள் என இருந்த முன்பதிவு காலம் இனி 120 நாட்கள் முன்பு வரை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுதவிர மூத்தகுடி மக்களுக்கு 2–ம் வகுப்பு படுக்கை பெட்டியில் கீழ் படுக்கை முன்னுரிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு பெட்டிக்கு மூத்த குடிமக்கள் இருவருக்கு மட்டுமே கீழ்படுக்கை ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது அவை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் போதே தானாகவே இந்த ஒதுக்கீட்டை பெற முடியும்.
பயணத்தின் போது கீழ்படுக்கை காலியாக இருந்தால் அதனை மூத்த குடிமக்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து