எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - ரெயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. இதற்காக ரெயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரெயில்வே துறையின் வருவாயை பலமடங்கு பெருக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1–ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
ரெயில் நிலையங்களில் உறவினர்களை வழி அனுப்ப வருபவர்கள் கட்டாயம் பிளாட்பாரம் டிக்கெட் பெற வேண்டும். இந்த கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருவாய் உயர்வது மட்டுமின்றி ரெயில் நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும் குறையும் என்று ரெயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஒருவரை வழி அனுப்பவோ, வரவேற்கவோ வரும் போது குடும்பமாக 10–க்கும் மேற்பட்டவர்கள் வரும் போது இடநெரிசலும், கழிவறை, குடிநீர், குப்பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதும் குப்பைகள் குவியும் நிலையும் உருவாகின்றன.
இவற்றை கருத்தில் கொண்டு தான் பிளாட்பார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சென்ட்ரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–
பிளாட்பாரம் கட்டணம் உயர்வதன் மூலம் ரெயில் நிலையத்திற்கு தேவையற்ற நபர்கள் வருவது குறையும். வழியனுப்ப கூட்டமாக வருவதற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு பேர் வரலாம். இதன் மூலம் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நிலையத்தை சுத்தமாக, தூய்மையாக வைத்து கொள்ள முடியும்.
சென்ட்ரல் நிலையத்தை தினமும் சராசரியாக 2 லட்சம் பேர் கடந்து செல்கின்றனர். 10 ஆயிரம் பேர் பிளாட்பாரம் டிக்கெட் பெற்று உள்ளே வருகின்றனர். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தேவையற்ற நெரிசலை பிளாட்பாரம் கட்டண உயர்வு மூலம் தவிர்க்கலாம் என நம்புகிறோம்.
மேலும் புறநகர் மின்சார டிக்கெட்டை வைத்து கொண்டு சென்ட்ரல் நிலைய வளாகத்திற்கு வரக் கூடாது. அதுபோல எக்ஸ்பிரஸ், மெயில் டிக்கெட் பயணிகள் மின்சார ரெயில் நிலையத்திற்கு செல்வதும் தவறாகும். பயணம் செய்யக் கூடிய ரெயில் நிலைய வளாகத்திற்குள் செல்லத் தான் அந்த பயணியின் டிக்கெட் தகுதி படைத்ததாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
பிளாட்பாரம் டிக்கெட் இல்லாமல் ரெயில் நிலையத்தில் பிடிப்பட்டால் ரூ.1000 அபராதம் விதிக்க விதிமுறை உள்ளது. ஆனால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.350 தான் மனிதாபமான முறையில் வசூலிக்கப்படுகிறது. பிளாட்பாரம் டிக்கெட் 2 மணி நேரம் மட்டும் பயன்படுத்த தகுதியுடையது. அதற்குள்ளாக அவர் வெளியேற வேண்டும் என்பதும் ரெயில்வே விதிமுறை.
மேலும் ஏப்ரல் 1–ந்தேதி அன்று 120 நாட்கள் முன்பதிவும் தொடங்குகிறது. இதுவரை 90 நாட்கள் என இருந்த முன்பதிவு காலம் இனி 120 நாட்கள் முன்பு வரை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுதவிர மூத்தகுடி மக்களுக்கு 2–ம் வகுப்பு படுக்கை பெட்டியில் கீழ் படுக்கை முன்னுரிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு பெட்டிக்கு மூத்த குடிமக்கள் இருவருக்கு மட்டுமே கீழ்படுக்கை ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது அவை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் போதே தானாகவே இந்த ஒதுக்கீட்டை பெற முடியும்.
பயணத்தின் போது கீழ்படுக்கை காலியாக இருந்தால் அதனை மூத்த குடிமக்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.