முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் மீது இளங்கோவன் கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - தமிழக காங்கிரசின் சிறுபான்மை பிரிவு தலைவராக அஸ்லாம் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசியதாவது:–

சிறுபான்மை மக்களுக்கு மட்டும் அல்லாமல் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும் எதிரான ஆட்சியாக மோடி ஆட்சி செயல்படுகிறது. இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நம்மில் ஒரு தலைவர் (ப.சிதம்பரம்) பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போகும் என்று முன் கூட்டியே தெரியும் என பேசி வருகிறார். அப்படி தெரிந்தவர் அதை சீர்படுத்தும் வழியை செய்யவில்லையே ஏன்? இப்படி கட்சியை விமர்சித்து பேசுபவர்கள் தான் நாளை ஆட்சிக்கு வரும்போது மந்திரியாகவும் மாறி விடுகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பிராங்ளின் பிரகாஷ், அகரம் கோபி, மன்சூர்அலி, ஆதி நாராயணன், ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு விழாவில் குஷ்புவை குலுங்கிகுலுங்கி சிரிக்க வைத்த இளங்கோவன்

பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது நடிகை குஷ்பு வந்ததும் அரங்கத்தில் இருந்த தொண்டர்கள் பலர் உற்சாகத்தில் விசில் அடித்தனர். பின்னர் இளங்கோவன் பேசும் போது அதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டு, நமது செய்தி தொடர்பாளர் குஷ்பு ரசிக்கத் தெரிந்தவர். அவரும் நன்றாக விசில் அடிக்க தெரிந்தவர்தான் என்று குறிப்பிட்டார்.அவர் இவ்வாறு சொன்னதும் கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. அதைப் பார்த்து குஷ்பு குலுங்கி குலுங்கி சிரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து