முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோப்பையை வென்ற ஆஸி. அணிக்கு ஜனாதிபதி, - பிரதமர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் சுவாரசியமில்லாமல் முடிந்து போனதுதான் வேதனைக்குரிய விஷயம். ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி எளிதாக வீழ்த்தி 5வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் நியுசிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது என்றே சொல்லலாம். முதல் முதலாக இறுதி போட்டி வரை வந்த அந்த அணி வெற்றிக்கனியை சுவைக்காமல் தோல்வியை சுவைத்தது ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கி விட்டது. இதனிடையே வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். அதே போல பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய அணிக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மீண்டும் ஒருமுறை உலக கோப்பையை வென்றிருக்கிறீர்கள்.

மிக சிறப்பாகவும் ஆடியிருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி ஆஸி. அணியை பாராட்டி உள்ளார். வெற்றி பெற்ற ஆஸி. அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. வெற்றி பெற்ற ஆஸி. அணிக்கு ரூ. 30 கோடி பரிசு கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து