முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானிக்கு பத்ம விபூஷனண் விருது

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும் வழங்கப்பட்டன.

மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. எல்.கே. அத்வானி, பிரகாஷ்சிங் பாதல், ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் அத்வானி, பிரகாஷ் சிங் பாதல், ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு ஜனாதிபதி பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார். தமிழக முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, பில்கேட்ஸ், சுதா ரகுநாதன் உள்ளிட்ட 12 பேருக்கு பத்ம பூஷண் விருதும், சஞ்சய் லீலா பன்சாலி உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் பத்ம விபூஷண் விருதைப் பெறவில்லை. பத்ம விருது பெறாதவர்களுக்கு மற்றொரு நாளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து