முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஆக்ரமிப்பு செய்து எ.வ.வேலு கட்டிய கல்லூரி : முதல்வர் புகார்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - நில ஆக்ரமிப்பு செய்து கல்லூரி கட்டியவர் திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு என்று சட்டபேரவையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பற்றி தமிழக சட்டபேரவையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் விளக்கமளித்து கொண்டிருந்த போது திமுக உறுப்பினர் எ.வ.வேலு பாயிண்ட் ஆப் ஆர்டர் என்று அடிக்கடி குறுக்கிட்ட வண்ணமிருந்தார். அப்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி உறுப்பினர் வேலு ஏன் ஆர்வமாக இருக்கிறார் என்பது இப்போது புரிகிறது. அவர் நில ஆக்ரமிப்பு கல்லூரி கட்டியிருக்கிறார். இப்போது மற்றொரு கல்லூரி கட்ட திட்டமிடுகிறாரோ என்று சூடான பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து