முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஆந்திராவில் 5 பேர் பலி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே கோகுல்பாடு என்ற பகுதியில் உள்ள பாட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியானார்கள்.  இதில், பெண் பணியாளர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயமடைந்த மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடி விபத்து காரணமாக அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதாக  தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும், இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர  அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து