முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் தரையிறங்கிய விமானம் மோதி விபத்து

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

டொரண்டோ - கனடாவில் ஏர்கனடா ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று நோவா ஸ்கோடியாவின் ஹாலிபாஸ் சர்வதேச  விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது கடுமையான பனிப்புயல் வீசி கொண்டிருந்தது. எனவே விமானிகள் அந்த விமானத்தை மெதுவாக தரையிறக்கினார்கள். அப்போது மதியம் 12.40 மணியாகும். இருந்தும் விமான நிலையத்தின் ஓடுதளம் சரிவர தெரியாமல் மங்கலாக இருந்தது.

இந்த நிலையில் அந்த விமானம் ஓடு தளத்தில் இறங்கி தாறுமாறாக ஓடி மோதியது. விமானத்தில் 133பயணிகள், விமானிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் இருந்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. ஆனால் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒருவர் மட்டும் பலத்த காயம் அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து