முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாதங்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு முறை: இன்று முதல் அமல்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - ரயில் டிக்கெட்டை 4 மாதங்களுக்கு முன்னதாக பதிவு செய்யும் முறை இன்று (ஏப்ரல் 1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான ரயில்வே நிர்வாக அறிவிப்பில், "மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில் டிக்கெட் முன்பதிவு காலத்தை 60 நாளிலிருந்து 120 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும், பயண நாள் இந்த 120 நாட்களில் பொருந்தாது.

தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ், சிறப்பு ரயில்கள் போன்ற ஒரு சில ரயில்களின் முன்பதிவில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த ரயில்களுக்கு ஏற்கனவே உள்ள குறுகிய கால முன்பதிவு நேரமே பொருந்தும். சர்வதேச சுற்றுலா பயணிகளின் முன்பதிவு காலமான 360 நாட்கள் பதிவு காலத்தில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து