முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலியில் கடும் மழை: 20 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

சானிடாகோ - சிலி நாட்டில் அண்மையில் பெய்த கடும் மழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். சிலியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான மழை பெய்தது. பலத்த மழை காரணமாக அந்நாட்டில் உள்ள ஏராளமான ஏரிகல், ஆறுகளில் மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த மழைக்கு இது வரை 20 பேர் பலியாகியிருப்பதாகவும், 17 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு அதிபரின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்காக பல்வேறு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து