முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் வெள்ளம் மீட்பு பணிக்கு உதவ கட்சியினருக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு கட்சியினருக்கு தலைவர் மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவம் தவறிய கனமழைக்கு 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து தெருக்களின் வழியாக வீடுகளுக்குள் புகுந்து ஓடுகிறது. அனந்தநாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில் உயர்மட்ட குழு காஷ்மீர் விரைந்துள்ளது. பேரிடர் மேலாண்மை படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் நிலச்சரிவில் சிக்கி பாதித்தவர்களுக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய பிடிபி கட்சியினர் முன்வர வேண்டும் என அதன் தலைவர் மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து