முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவுச்சங்க உதவியாளர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 589 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாநில ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்ட அறிவிக்கை எண் 3/2012 நாள் 2-11-2012 இன்படி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு 09.12.2012 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 21.9.2014 முதல் 30.9.2014 வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 03.02.2015 அன்று மாநில ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் (www.tncoopsrb.in) வெளியிடப்பட்டது.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் வகுப்பு வாரி சுழற்சிமுறை அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் விபரங்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் www.tncoopsrb.in 30.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான எழுத்து மூல ஆணைகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள்/ சங்கங்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு தனியே அனுப்பிவைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து