முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, இசட் பிளஸ் பிரிவு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஜெட்லிக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர்த்து, அவருக்கு டெல்லி போலீசாரும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் உளஅள மிக முக்கிய நபர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்திருப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஆய்வு நடத்தியது. இதையடுத்து, அருண் ஜெட்லிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இந்த முடிவின்படி ஜெட்லியின் பாதுகாப்பு அளிக்கும் பணியில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 60 அதிரடிப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிய பாதுகாப்பு விதிகளின் படி, டெல்லியில் உள்ள ஜெட்லியின் வீட்டில் அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவர்தது துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்குப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து