முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமவள முறைகேடு: ஜனார்த்தன ரெட்டியின் சொத்து ஜப்தி

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

நகரி - கர்நாடக மாநில பாஜ முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவர் கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இவருக்கு சொந்தமான சொத்துக்கள் ஏற்கனவே கர்நாடகாவில் முடக்கப்பட்டன. இந்த நிலையில் ஆந்திராவில் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவி லட்சுமி அருணா ஆகியோர் நடத்தும் அசோசியேட் மைனிங் கம்பெனி செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவன சொத்துக்களை ஜப்தி செய்ய அமலாக்க துறை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 24.37 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதுவரை முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ. 62.9 கோடி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து