முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே சீரான சுங்கச்சாவடி கட்டணம்: அமைச்சர் கோரிக்கை

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல் என்று சட்டசபையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்வு அமல்படுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.. அதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இது முழுக்க முழுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வரம்பிற்குட்பட்டது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. இதற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை. இந்த கட்டணத்தை ஒரே சீராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.அது குறித்து எந்த பதிலும் வரவில்லை. தமிழக அரசின் சார்பாகவும் கடிதம் எழுதப்பட்டது. அதற்கும் மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து