முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரி சபையை மாற்ற மோடி முடிவு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையடுத்து தங்கள் ஆட்சியின் ஓராண்டு செயல்பாடுகளை மக்களிடம் விளக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் விரிவான அறிக்கையை வெளியிட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு துறையிலும் பாஜக அரசு என்னென்ன வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மோடி வெளியிடும் அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் பிரதமர் இப்போதே இறங்கி விட்டார்.

அதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் அவர் மத்திய மந்திரி சபையில் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக உள்ள 13 பேரை சந்தித்து பேசினார். ஒவ்வொரு துறை மந்திரியிடம் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இது பற்றி தனியாக தனக்கு அறிக்கை தரும்படி 13 இணை அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டார். சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பாஜக தேசிய தலைவர் அமீத்ஷாவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 மாதங்களில் சில மத்திய மந்திரிகளின் செயல்பாடு பிரதமர் மோடிக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே திறமையாக பணியாற்றாத சில மத்திய மந்திரிகளுக்கு கல்தா கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். எனவே மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய மூத்த மந்திரி ஒருவர் திரும்பி செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை மோடி ஏற்று கொண்டுள்ளார். எனவே மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது கேபினட் மந்திரிகள் சிலரது இலாகா  மாறக்கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து