முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழி விடைத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன. தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டது. இன்று அல்லது நாளைக்குள் எந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து, அதற்குரிய கமிட்டி முடிவு செய்து அறிவித்து விடும்.

பின்னர் அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கும் இதுகுறித்து தகவல் அனுப்புவார்.  6-ந்தேதி முதல் பிளஸ்-2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. மதிப்பீடு செய்யும் பணி 13-ந்தேதி முடிவடைய இருக்கிறது.

அதன்பின்னர் மதிப்பெண்கள் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு, மே முதல் வாரத்தில் கடந்த ஆண்டு போல் தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி, முடிந்தால் முன்கூட்டியே முடிவை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர்களுக்கு இணையதளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து