முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மியில் இணைகிறாரா இன்போசிஸ் தலைவர்?

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

பெங்களூர் - இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, ஆம் ஆத்மி கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடையே ஆம் ஆத்மிக்கு நல்ல செல்வாக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் இன்போசிஸ் நிறுவன இயக்குநர் பாலகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக பெங்களூரில் போட்டியிட்டு கணிசமாக வாக்குகளையும் பெற்றார்.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சமீபத்தில் டெல்லி சென்று அரவிந்த் கேஜ்ரிவாலையும், மனிஷ் சிசோடியாவையும் சந்தித்து விட்டு திரும்பியுள்ளார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் நாராயணமூர்த்தி ஆத்மியில் இணையப் போவதாகவே அக்கட்சி வட்டாரங்கள்  தெரிவித்தன.

பெங்களூரை சேர்ந்த அட்சய பாத்திரா என்ற அமைப்புக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கொடை அளித்து வருகின்றன. அதில் நாராயணமூர்த்தி மனைவி, சுதாமூர்த்தி தலைவராக உள்ள அமைப்பு மிக முக்கியமானதாக கூறப்படுகிறது. எனவே அந்த திட்டத்தை டெல்லியில் விரிவுபடுத்தவே கெஜ்ரிவால் மற்றும் டெல்லி கல்வி அமைச்சரான மனிஷ் சிசோடியா ஆகியோரை நாராயணமூர்த்தி சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து