முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு ரன்னில் சென்னை வெற்றி: நெக்ராவுக்கு தோனி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடி சென்னை 150 ரன்னை எடுத்தது. இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. ஆனால் சென்னை ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றது. அல்பி மார்கல் 73 ரன் எடுத்தார். ஆசிஷ் நெக்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். 19வது ஓவரை ஆசிஷ் நெக்ரா சிறப்பாக வீசினார். அதில் 8 ரன்னே விட்டு கொடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரில் 17 ரன் எடுக்கப்பட்டது.

அந்த ஓவரில் 5வது பந்தை ரெய்னா அபாரமாக தடுத்து 2 ரன் மிச்சப்படுத்தி கொடுத்தார். கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்ட போது அல்பி மார்கலால் அந்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அந்த பந்து எல்லைக்கோட்டுக்கு சில அடிக்கு முன்பு பிட்ச் ஆகி சென்றது. இதனால் பவுண்டரி மட்டுமே கிடைத்தது. இதனால் சென்னை அணி வெற்றி பெற முடிந்தது. வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது,

கடைசி ஓவரை வீசிய பிராவோ திருப்தி அடைந்திருக்க மாட்டார். இருந்தாலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிஷ் நெக்ரா பந்து வீச்சு அபாரமாக இருந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்டார். இது வேகப்பந்து வீச்சாளருக்கு முக்கியமானது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் விளையாடி இருக்கிறோம். இந்த வெற்றி எங்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் முக்கியமானதாகும். சென்னை ரசிகர்கள் முன்பு வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் எதிரணியினரையும் கூட பாராட்டினர் என்றார். டெல்லி கேப்டன் டுமினி கூறுகையில், எங்கள் அணி வீரர்கள் நினைத்து பெருமைப்படுகிறேன். கடும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினோம். இந்த ஆட்டத்தில் நிறைய கற்று கொண்டோம் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து