முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் பிறந்தநாள்: அதிமுக சார்பில் மதுசூதனன் மாலையணிவிக்கிறார்

திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் சென்னை ஆற்காடு சாலையில் அம்பேத்கர் சிலைக்கு அவைத்தலைவர் மதுசூதனன் இன்று மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார். சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளான இன்று காலை 10.30 மணி அளவில், சென்னை, ஆற்காடுசாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவர்இ. மதுசூதனன்மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும்,கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம்,புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி,மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு,விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள்அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறுஅமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவுசங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா ஒப்புதலோடு கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசின் சார்பில் சென்னை துறைமுக வாயிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலை 9 மணிக்கு தமிழக அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து