முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, அண்ணல் அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் 125 வது பிறந்தநாள் விழா சென்னை ராஜாஜி சாலையில் துறைமுக வாயிலில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அம்பேத்கரின் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சமூகநலத்துறை மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி, செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம், மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் .விஜயகுமார், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் ராசாராம், துறைமுக பொறுப்புக்கழகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா, செய்தித்துறை இயக்குநர் குமரகுருபரன் ஆகியோர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து