முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பக்தர்கள் கூட்டம் குறைவு: திருப்பதி கோவில்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, ஏப்.17-
திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், கடந்த 7ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஆந்திர சிறப்பு போலீஸ் படை மற்றும் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை, அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததில் இருந்து, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆந்திர பகுதிகளுக்கு செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்திற்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் தான் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. தமிழ் புபத்தாண்டு தினத்தில் பெருமாளை தரிசிப்பதை பெரும்பாலான தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால், தெலுங்கு வருட பிறப்பைக் காட்டிலும், தமிழ் புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழியும், அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருப்பார்கள்.


இந்த நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு 20 தமிழர்கள் பலியான சம்பவம் நடந்து சில நாட்களே ஆகியிருப்பதால், ஒருவித அச்சம் காரணமாக, திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பதை தமிழர்களில் பலர் தவிர்த்து விட்டனர். அதன் காரணமாக, இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 13 லட்சம் மட்டுமே உண்டியல் வருமானமாக கிடைத்து. இது கடந்த ஆண்டு உண்டியல் வருமானத்தை விட பல லட்சம் ரூபாய் குறைவாகும்.

ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் 2 மணி நேரத்திலேயே ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். 2 நடைபாதைகள் வழியாக சென்ற 14 ஆயிரம் பக்தர்களுக்கு 5 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது.  இலவச தரிசனத்திற்கு மட்டும் சில மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். இது ஒருபுறமிருக்க, துப்பாக்கி சூடு சம்பவத்தினால் ஆந்திர மாநில அரசு போக்கு வரத்து கழகமும் வருமானம் இழப்பினை சந்தித்துள்ளது.

ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் 214 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. சேஷாசலம் துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பஸ்கள் அனைத்தும் இயக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து