முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ மருதாசலம் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருதாசலம் மறைவுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி :

கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தலைவரும்  தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான மருதாசலம் உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

ஆரம்ப கால உடன்பிறப்பு மருதாசலத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து